முதலையை விழுங்கும் ஆமை

ஓட்டுக் கேட்டு ஒண்டுவான்
ஒட்டுத் திண்ணையிலே
போட்டப் பின்னே பதுங்குவான்
பளிங்கு மாளிகையிலே ! -அந்த

கோவிற்கும் குள்ளநரிக்கும் பேதமில்லை
அரசியலுக்கும் தேர்தலுக்கும் பந்தமில்லை

தாகம் தீர்க்க மனுகொடுத்த
காகங்களின் எச்சிலையும்
குடித்திடுவான் கரையினிலே
ஆமையாக முதலையையும்
விழுங்குவான் குளத்தினிலே-அந்த

அரசனுக்கும் எமனுக்கும் பேதமில்லை
அரசியலுக்கும் தேர்தலுக்கும் பந்தமில்லை

கட்டு நோட்டைக் காட்டியே
விலை பேசுவான் பட்டுப் பூச்சி
கூட்டத்துக்குப் பட்டா போடுவான்
பூச்சியதை கொல்லுவான் வெந்நீரிலே
நூலெடுத்துப் பறந்திடுவான் ஆகாயத்திலே -அந்த

அரசனுக்கும் அரக்கனுக்கும் பேதமில்லை
அரசியலுக்கும் தேர்தலுக்கும் பந்தமில்லை ...

விழிப்புடனே விழித்து நாமும்
வீறுகொண்டு நடந்திடுவோம்
வெட்டிப்பேச்சை நம்பி நாமும்

வழிமாறிப் போகாமல்
உண்மைக்காய் உழைத்திடுவோம்
நல்லவனைத் தேர்ந்தெடுத்து
நல்லாட்சிப் புரிந்திடுவோம் ....

நல்லவனே இல்லையென்று
நாக்கு சொட்டிப் போகாமல்
நாமே களத்தில் இறங்குவோம்
நல்லதை நாடிச் செல்லுவோம் ..

எழுதியவர் : பிரியாராம் (30-Jan-15, 1:48 pm)
பார்வை : 103

மேலே