முத்துகுமார் நினைவு தின கவிதை
தீ பரவட்டும்
ஈடு செய்ய இயலாத
உன்தன் இழப்பிற்கு - கண்ணீரை காணிக்கையாக்காமல்
இன துரோகிகளின் குருதியை
காணிக்கையாக்கவே காத்திருக்கிறோம்
அதற்காய் முதலில்
வீரவணக்கம்!!!
காக்க வேண்டிய இந்தியமே
கயவர்களாய் மாறியதன்
துரோகம் கண்டு
நெஞ்சு பொறுக்காது
தீயை தழுவி
உன்தன் உயிரையே
விதையாய் விதைத்தாயே - தோழனே
அன்று உன் மீது பற்றிய - தீ
பரவட்டும் வேள்வித்தீயாய்
மக்கள் மனதில்
துரோகிகளே
நீங்கள் வெல்லவில்லை
நினைவிருக்கட்டும்
தோல்வியை தாமத -
படுத்தியுள்ளீர் அம்மட்டே!!
ஈழம் வெல்லும்!