காதலித்த பாவத்தால்
முத்தமிட்ட
கன்னத்தை
வெட்டி எரிந்து சென்றாய்
கை கோர்த்த
விரலை
தீயில் சுட்டெரித்தாய்
காதல் பேசிய
நாவை
கடித்து துப்பினாய்
கண்கள் இரண்டையும்
கழுகாய்
கொத்தி சென்றாய்
இவ்வளவு
செய்த நீ
ஏன் இதயத்தை
மட்டும்
ஒன்றும் செய்யாமல்
விட்டு சென்றாய் .