முரண் துளிகள் -- இரண்டு

​பெண்ணுரிமை மாநாட்டிற்கு தலைமை
மகளிர் சுதந்திரப் பேரணிக்கு முன்னிலை
​மருமகளை வதைப்பதோ வீட்டினில் ...

-------

தமிழர்கள் நிலைபற்றி ஊடகத்தில் உருக்கம்
தமிழ்மொழியின் சிறப்புப்பற்றி மேடை முழக்கம்
கொஞ்சுவதோ ஆங்கிலத்தில் பேரனிடம் ...

-------

தமிழ்வழிக் கல்வியே தேவையென வாதம்
தமிழையே சுவாசியுங்கள் என்று போதனை
தம்மகளை சேர்ப்பதோ கான்வென்ட் பள்ளியில் ...

-------

நம் நாடு நம் மண் நம் மொழி என்கிறார்
தீராத ஆசையாம் அமெரிக்க குடிமகனாக
முரணுள்ள மனதின் உச்சக்கட்டமோ ...

--------

இனப்பற்று மொழிவெறி கொள்கை எனதென
இடிமுழக்கம் வீதியில் கொடியுடனே நாளும்
இலக்காம் அந்நிய நாட்டில் குடியேருவதோ ...

--------

முரண்பட பேசுவதோ முற்றிலும் தவறாம்
முரண்படும் மனங்கள் மடிவதே மேலாம்
மூன்றாம் முறையாய் கட்சி மாறுகிறார் ....

தொடரும் ...

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Feb-15, 9:02 am)
பார்வை : 111

மேலே