எதற்காய் மௌனம்
எதற்காய் மௌனம்?
உன் சொற்களின் தீ- என்னை
சுட்டுவிடுமென அச்சமா?- உன்
சுடுசொற்களும் என்னுள்
சுடராகும் என அறிவாயா?-பின்
எதற்காய் இந்த மௌனம்?
என் நிலத்தில்
பூக்கள் பூக்கவென்று
பார்வைகள் தருகிறாய்!- ஆனால்
வார்த்தை உரமின்றிப் போனதால் அங்கு
பூகம்பங்கள் மட்டுமே வந்ததை அறிவாயா?
எதற்காய் இந்த மௌனம்?
எனக்காக பூக்கும் உன்
இதயப் பூக்களை
இன்றேனும் என்னிடம் சேர்ப்பாயா?
இல்லை உன்
சேமிப்புக்கணக்கில் ஒன்று
சேர்ப்பாயா?
மாலையிடும் நாள் வரை
மௌனம் காப்பாயா?