தமிழும் தமிழனும்

தமிழன் என்று மார்தட்டும் அனைத்து தமிழர்களுக்கும்,

தமிழன் என்று சொல்லி என்ன சாதித்தோம் என்று தெரியவில்லை, அவமானப்பட்டது தான் அதிகம்.
இங்கு இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்துவதை போல் தமிழ் மொழியையும் வைத்து அரசியல்
நடத்துகிறார்கள். வேறு மொழியை பயிற்றுவிக்க யாரும் தயாராய் இல்லை. ஆனால் அரசியல் நடத்தும்
தலைவர்கள் மட்டும் தன் குடும்பத்தினருக்கு ஐந்தாறு மொழிகளை பயிற்றுவிக்கின்றனர்.

இங்கு தமிழ் என்று சொல்பவனை விட தமில் என்று சொல்பவர்களும் தங்லிஷில் பேசுபவர்களும் தான் அதிகம்.
தன் குழந்தைக்கு தமிழில் பெயரிட தயங்கும் பெற்றோர்களும் அதிகம்.

தமிழ் மட்டும் கற்று கொண்டு, தமிழ் நாட்டில் உள்ள கம்பனிகளில் கூட ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே வேலை என்று
சொல்லும் போது வெறுப்பாகத்தான் இருக்கிறது.

இந்த கட்டுரை எதுக்காக என்றால் என்னைப்போல் வெளிநாட்டில் வேலை செய்யும் அனைத்து தமிழர்களுக்கானது.
எங்கள் நிலைமையை நீங்களும் அறிய வேண்டும்.கேரளாவில் இருந்தோ கர்நாடகாவில் இருந்தோ வரும் அனைவருக்கும்
அவர்கள் தாய் மொழியை தவிர கூடுதலாக ஹிந்தியும் ஆங்கிலமும் தெரிந்திருக்கிறது. அதனால் அவர்கள் வேலை செய்கிறார்களோ இல்லையோ ஒரு உயர்ந்த பதவியை அடைந்து விடுகிறார்கள்.

காலம் முழுதும் நாம் அடிமைகளாய் மட்டுமே இருக்க வேண்டி இருக்கிறது. வேறு மொழி தெரியாமல் இங்கு கேலி சிரிப்புகளும் கிண்டல்களும் தான் அதிகம்.

தமிழை வைத்து அரசியல் பண்ணும் அரசியல் வாதிகள் என்று திருந்துகிறார்களோ, அப்போது தான் தமிழும் தமிழனும்
சிறந்து விளங்க முடியும்.

இந்த கட்டுரையின் நீளம் குறைவாக இருந்தாலும் அதன் ஆழம் அதிகம்...அனுபவித்தவர்களுக்கு புரியும் ...

தமிழ் மொழியை தாங்கி பிடிப்பதை கூறி வேறொன்றையும் அறியாமல் இருக்கும் நாமும் திருந்தினால் தமிழன் புகழ்
ஓங்கி நிற்கும்....

நன்றிகளுடன்
தவம்

எழுதியவர் : தவம் (10-Feb-15, 12:17 pm)
பார்வை : 1634

சிறந்த கட்டுரைகள்

மேலே