அதுதான் இப்படைப்பு

கரும்பின் சுவைபோலவும் இனிக்கும்
நிலவேம்பின் வேராகவும் கசக்கும்
அதுதான் வாழ்க்கை !
வாழும்வரை பயணித்து இனிக்கும்
இடையிலும் வெட்டுண்டு கசக்கும்
அதுதான் நட்பு !
இதயங்கள் இனைந்தும் இனிக்கும்
உள்ளங்கள் உடைந்தும் கசக்கும்
அதுதான் காதல் !
நெஞ்சங்கள் ஒன்றினால் இனிக்கும்
புரிதலும் குன்றினால் கசக்கும்
இதுதான் திருமணம் !
பொருளும் புரிந்தால் இனிக்கும்
நேரம்கழிக்க படித்தால் கசக்கும்
அதுதான் கவிதை !
செல்வமும் குவிந்தால் இனிக்கும்
சேர்த்ததும் கரைந்தால் கசக்கும்
அதுதான் ( இன்றைய ) அரசியல் !
இலாபமே ஈட்டினால் இனிக்கும்
நட்டமே தொடர்ந்தால் கசக்கும்
அதுதான் வியாபாரம் !
நகைச்சுவையாக பேசினால் இனிக்கும்
அர்த்தமில்லாமல் பேசினால் கசக்கும்
அதுதான் பட்டிமன்றம் !
அடுக்குமொழி கவிதையெனில் இனிக்கும்
தடுமாற்றமுடன் கவிவாசித்தால் கசக்கும்
அதுதான் கவியரங்கம் !
எதிர்கட்சியை நிந்தனைசெய்தால் இனிக்கும்
உலகளாவிய அரசியல் பேசினால் கசக்கும்
அதுதான் அரசியல் மேடை !
கலகலப்பு காட்சிகளால் இனிக்கும்
கருவுள்ள கதையானால் கசக்கும்
அதுதான் திரைப்படம் ( இன்று ) !
அன்பளிப்பும் ஆயுதங்களும் இனிக்கும்
நேர்மையான முறையெனில் கசக்கும்
அதுதான் தேர்தல் களம் !
பதவியும் பணமும் மட்டுமே இனிக்கும்
உதவிடு உலகோர்க்கு எனில் கசக்கும்
அவர்தான் அரசியல்வாதி !
விரும்பும்வரை வாழ்வதெனில் இனிக்கும்
விரும்பாமல் வாழ்வதெனில் கசக்கும்
அதுதான் ஆயுட்காலம் !
முதுமை இல்லையெனில் இனிக்கும்
விரைவில் தளர்ந்திட்டால் கசக்கும்
அதுதான் வயது !
இதோடு நிறுத்தினால் இனிக்கும்
மேலும் நான் நீடித்தால் கசக்கும்
அதுதான் இப்படைப்பு !
பழனி குமார்