சரியான திட்டப்படி

எப்படி இன்றைக்கு ஆட வேண்டும் என
காற்றில் அசைந்து ஆடும்
தென்னங்கீற்றுக்கும்
எப்படி மலர வேண்டும் என
என் தோட்டத்தில் பூக்கும் மலருக்கும்
எப்போது பெய்ய வேண்டும் என
எங்கள் ஊர் மழைக்கும்
எந்த விதமான திட்டமிடலும்
இருப்பதாகத் தெரியவில்லை..
தங்கள் வேலையை பாரமின்றி செய்வதோடு
ஒன்றை ஒன்று வேடிக்கை
பார்ப்பதோடு சரி..
அவைகள்
முறை தவறுவதாகவும் தெரியவில்லை!

எழுதியவர் : கருணா (16-Feb-15, 5:56 pm)
பார்வை : 46

மேலே