வினோதம்
பள்ளி மாணவர்க்கு
வகுப்பு வேளை விடுப்பு !
பாவலர்க்கு
பாவில் ஈற்றடி எடுப்பு !
நீச்சல் பழகும்
நீள்கடல் மீனுக்குத் துடுப்பு !
வறுமையின் நிழலில்
முழுதும் எரியும் அடுப்பு ! -வினோதம் ! ஆம் வினோதம் !
கற்றவர் என்றால்
பேசும் மொழியில் பிழை !
சஹாராவிலோ
ஆலங்கட்டி மழை !
கைம்மாறு இன்றி
பட்டுப்பூச்சி தரும் இழை
மழை வெய்யில் தாங்கியும்
பண்பட இசைக்கும் கழை ! - வினோதம் ! ஆம் வினோதம் !
வெளுத்துச் சிவந்துக்
கருமை பூணும் வான் !
கடவுள் வரைந்த
ஓவிய உடலின் மான் !
எச்சில் என்றாலும்
இச்சையைத் தூண்டும் தேன் !
ஏதோ பேசிக்
கவிதை யெனச்சொல்லும் நான் - வினோதம் ! ஆம் வினோதம் !
குறிப்பு:
எனது இளவல் என் திறமையைச் சோதிக்க கொடுத்த மூன்று தலைப்புகளில் ஒன்று..மற்றவை பின்னே வரும்....
வித்தக இளங்கவி
விவேக்பாரதி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
