வினோதம்

பள்ளி மாணவர்க்கு
வகுப்பு வேளை விடுப்பு !

பாவலர்க்கு
பாவில் ஈற்றடி எடுப்பு !

நீச்சல் பழகும்
நீள்கடல் மீனுக்குத் துடுப்பு !

வறுமையின் நிழலில்
முழுதும் எரியும் அடுப்பு ! -வினோதம் ! ஆம் வினோதம் !

கற்றவர் என்றால்
பேசும் மொழியில் பிழை !

சஹாராவிலோ
ஆலங்கட்டி மழை !

கைம்மாறு இன்றி
பட்டுப்பூச்சி தரும் இழை

மழை வெய்யில் தாங்கியும்
பண்பட இசைக்கும் கழை ! - வினோதம் ! ஆம் வினோதம் !

வெளுத்துச் சிவந்துக்
கருமை பூணும் வான் !

கடவுள் வரைந்த
ஓவிய உடலின் மான் !

எச்சில் என்றாலும்
இச்சையைத் தூண்டும் தேன் !

ஏதோ பேசிக்
கவிதை யெனச்சொல்லும் நான் - வினோதம் ! ஆம் வினோதம் !

குறிப்பு:
எனது இளவல் என் திறமையைச் சோதிக்க கொடுத்த மூன்று தலைப்புகளில் ஒன்று..மற்றவை பின்னே வரும்....

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (24-Feb-15, 10:01 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
Tanglish : vinodham
பார்வை : 231

மேலே