எச்சில் ஆகும் பிச்சைக்காரி

என் பாதி கிழிந்த ஆடையின்
இடையே
படர்ந்து விட்ட உங்கள் கழுகு
பார்வை தேடுவது எதையோ .?

யாசிக்க நீட்டிடும் என் கரங்கள்
கண்களுக்கு புலப்படவில்லை.

காய்ந்து வறண்ட பேச்சை நீங்கள்
கண்டுகொள்ளவேயில்லை .

என் விழிகளில் இருந்து வெளியேறும்
வலி கலந்த விழிநீர் உங்கள் விழிகளுக்கு வேண்டப்படாத ஒன்று .

அரைவயிரெனும் அன்னம் இடுங்கள்.
பசிக்காய் யாசிக்கும் என்னிடம்
"பத்தே நிமிடத்தில் படையல்
போடுகின்றேன் படுக்கைக்கு வா "
என்பது மட்டுமே உங்கள்
பதிலாகி போகின்றது .

பெற்ற பிள்ளையை போன்றவள்
பிச்சைக்காரி என்பதால்
எச்சிலாகி போகின்றேன்
ராமன் வேஷமிடும் காமுகரின்
இச்சைக்கு .!!!!!

எழுதியவர் : கயல்விழி (3-Mar-15, 6:07 am)
பார்வை : 570

மேலே