மறக்க முடியுமா

எப்போதாவது ஞாபகம் வரும்...

நீ என்னை அடித்ததும்
நான் உன்னை கடித்ததும்

நான் அழுத பொய் அழுகை
நீ பயந்து கேட்ட மன்னிப்பு

உன்னை நான் கிள்ளியதும்
என்னைப் பற்றி நீ கோலி சொல்லியதும்

உன்னை பிரிந்த வேளையில் நான் காட்டிய டாட்டா...
என்னை பிரிந்து நின்ற உந்தன் கண்ணின் சோகம்....

எப்போதாவது ஞாபகம் வரும்....

அந்த எப்போதும் எனக்கு அடிக்கடி வரும்...!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Mar-15, 9:07 am)
பார்வை : 936

மேலே