பேதலிப்பு

யாரும் உலுப்பிடா
விழியசைவற்ற
கணமொன்றில்
கண்ணாடியில் தெறித்த
நீர்த்திவலைகளின்
ஓவியம் வெறித்து-நின்
நினைவுச் சல்லடையில்
ஒழுகிக் கொண்டிருக்கிறது
உயிர்.
--கனா காண்பவன்.

எழுதியவர் : கனா காண்பவன் (7-Mar-15, 10:41 pm)
பார்வை : 106

மேலே