கலவிக்காதல் 3

பல நாள் பிரிந்து மீண்டும்
உன்னோடு கூடிய அந்த இரவு !

கருமேக காதலில் வெக்கமிட்டு
ஒளிந்தும் தெரிந்தும் ஒளிர்ந்த
அத்தேய்பிறை நிலவின்
ஒற்றை ஒளிக்கீறல்
ஜன்னலின் வழியே
உன் உதடுகளின்
நுனி ஈரத்தில் மிளிர ,
ஈரத்தில் நான் நனைந்த
இடைவெளியில் நீ
செல்லமாய் நிலவை நோக்கி

" பார் ... நீ மிச்சம் வைத்த
ஈர முத்தம் அதோ அங்கே..
இனி எக்கணம் எனை நீ பிரிந்தாலும்
உன் மிச்சத்தின் பொறுப்பை
அது கூறும் உனக்கு "

உன் கீழ் உதடு என் கீழ் உதட்டை மெல்ல அழுத்த
நம் சுவாசம் மோத ஏக்கமாய் நெருங்கிய நீ
"எனை இப்பொழுதே முழுமதி ஆகவிடு "

அந்நொடி உன் கருவிழி எங்கும்
தேயும் தேய் பிறை நிலவு மட்டும் தானடி !!

எழுதியவர் : ராம் (7-Mar-15, 10:23 pm)
சேர்த்தது : Ram
பார்வை : 103

மேலே