தினமும் காதலி

கருமேக சாரல்
நீ தலைதுவட்டி
சென்றபோது.

இளம் காலை
பிறை
நீ ஜன்னலில்
எட்டி பார்த்தபோது.

மொட்டவிழ்ந்த
இதழ்
நீ சிரித்தபோது.

பட்டுபூச்சிகள்
பாதை மறந்தது
நீ பாவாடை தாவணியில்
வந்தபோது.

பூகம்பம்மும் ,
பூ கம்பமும்,
நீ பார்த்து சென்றபோது.

மண் ஓசையை
இப்போதுதான்
கேட்கிறேன்
நீ கடந்து சென்றபோது

பிரம்மன்
தனக்காக என்று
படைத்து
தவறவிட்டான்
மண்ணில்.

இனி நீ எனக்காக
என்று
பதிந்து விட்டாய்
நெஞ்சில்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (17-Mar-15, 9:31 pm)
Tanglish : thinamum kathali
பார்வை : 212

மேலே