சாரிம்மானு சொல்ல தோணுது இப்போ

எந்திரிச்சது எட்டு மணிக்கு...
ஐயோ டைம் ஆச்சு எழுப்பி விட வேண்டியது தான....
கத்தி கிட்டே போட்டு வெச்ச
சுடு தண்ணியில குளிச்சுபுட்டு
அயர்ன் பண்ண துணியெடுத்து மாட்டி கிட்டு
அஞ்சு மணிலருந்து ஆசையா செஞ்ச சோத்த
அரகொரயா தின்னு புட்டு
உனக்கெல்லாம் சமைக்கவே தெரியாதான்னு
போற போக்குல மனச ஒடச்சு...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........
இது தெனமும் நடக்கறது தான்..
காலேஜ்ல படிக்கறப்போ அம்மாவுக்கு...
கல்யாணத்துக்கப்புறம் எனக்கு....
"சாரிம்மா"னு சொல்ல தோணுது இப்போ...

எழுதியவர் : சந்தியா பிரியா (20-Mar-15, 11:09 am)
பார்வை : 115

மேலே