மலர்களே

மலர்களே !!
தேனீக்களும் வண்டுகளும்
உங்களை துவம்சம் செய்ததாலா ?
அழகிழந்து நிறமிழந்து
துவண்டு
உடன் மடிந்துவிடுகிறீர்கள்!

பூக்களே நீங்கள்
வண்டுகளிடம் உங்கள் கற்பை இழந்தாலும்
பிறந்த பயனுக்காய்
எங்களுக்காய் அறுசுவைக் கனிகளை
தந்துவிட்டுத்தான் செல்கிறீர்கள்

நிம்மதியாய் விடைபெறுங்கள்
உங்களுக்காய் இவ்வுலகம்
உங்ளைச் சூடி மாலை இட்டு
பூஜைக்காய் தூவி
வாழ்த்தி கௌரவிக்கும்!

எழுதியவர் : ஜவ்ஹர் (22-Mar-15, 8:14 am)
Tanglish : malargale
பார்வை : 97

மேலே