காதல் -சகி

காதல் ...

காதல் என்று சொல்லிக்கொண்டு
வரும் எவ்வுறவும் நிலைப்பதில்லை
நம் வாழ்வுதனில் ...

உண்மை அன்பை கொண்ட
உள்ளம் மட்டுமே வாழ்வின்
எல்லைவரை வாழ்க்கை
துணையாக வரும்...

தன் அன்பையே நமக்கு
ஆயுளாக கொடுக்கும் ...

இன்ப துன்பங்களை
என்றுமே பகிர்ந்துக்கொள்ளும் ...

கைவிட எண்ணாத உள்ளம்
எதுவோ அதுவே நம்மை
உணர்ந்த காதல்....

கலங்கும் நேரங்களில்
கைகொண்டு தாங்கும் உள்ளமே
நம்மை உணர்ந்த உள்ளம்....

ஆயுள் முழுவதும்
அன்பையே கொடுக்கும் உள்ளமே
உண்மை காதல் உள்ளம்....

நான் உணர்கிறேன் ....
என் அன்பு காதலனால் .....

எழுதியவர் : சகிமுதல்பூ (23-Mar-15, 5:14 pm)
பார்வை : 88

மேலே