சமூகத்தில் பெண்கள்---ப்ரியா
சமூகத்தில் பெண்களின் இன்றைய நிலை......
பெண்கள் கவிதையா?கலையா?இலக்கியமா?இலக்கணமா?இசையா இன்பமா?என்று பல வினாக்கள் எழுப்புகின்றனர்???
ஆனால் பெண்ணென்பவள் உணர்வுள்ள ஒரு உயிர் என்று இச்சமூகத்தில் யாரும் அறியவில்லை போலும்.......
இன்று பெண்களுக்கு நடக்கும் சில சம்பவங்களைப்பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.....பெண்களுக்கு சுதந்திரம் சமஉரிமை எங்கும் எதிலும் ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்று பேசுகின்றனர் ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை??
தினம் தினம் பெண்களுக்கு நடக்கும் அவலங்கள் என்றும் மாறப்போவதில்லை என்றே தோன்றுகிறது.....தொந்தரவுகள் எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறதே தவிர குறையப்போவதில்லை.....பெண்களின் உணர்வுகளுக்கு இங்கு பலர் மதிப்பு கொடுப்பதுமில்லை என்பதே உண்மை.
பேருந்தில்,அலுவலகத்தில்,கல்லூரியில்,பள்ளியில்,போகும் வழியில் என எங்கும் எதிலும் பெண்கள் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மனித மிருகங்களால் மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகிறாள்.பெண்ணென்பவள் அப்பா,அண்ணா,தம்பி,தோழர் என இப்படி ஒவ்வொரு உறவு முறை வைத்து அப்படியே அந்த உறவில் சிறிதும் கலப்படமில்லா உண்மை அன்பைத்தான் பொழிவாள்..வெளியிலும் சரி உள்ளேயும் சரி தன்னை சுற்றி பல உறவுகள் உள்ளன என்ற நம்பிக்கையில் சுதந்திரமாய் நடமாடுகிறாள்.......ஆனால் அதையே தவறுதலான கண்ணோட்டத்தில் பார்த்து உடனிருப்பவர்களே சீண்டிப்பார்ப்பதுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயமாக உள்ளது....
பெண்களுக்கு முன்னேற்றத்தில் வளர்ச்சியில் மாற்றம் வந்துள்ளது......என்றாலும் சுதந்திரத்தில் இல்லை.நமது கீழ் வேலைப்பார்ப்பவள் தானே? இவள் நாம் பாடம் கற்பிக்கும் மாணவி தானே? தினமும் நாம் போகும் பேருந்தில் வருபவள் தானே?உரசிப்பார்த்தால் என்ன?ஒருமுறை கிள்ளிப்பார்த்தால் என்ன?என்பது சில ஆண்களின் இன்றைய பொழுதுபோக்காகவே இருக்கிறது.அந்நேரம் அப்பெண் மனதளவில் எவ்வளவு பாதிக்கப்படுகிறாள் என்று அவளது உணர்வுகளை புரிந்து கொள்வார் இல்லை............அப்படி புரிந்திருந்தால் இப்படி நடந்துகொள்வார்களா? வீட்டில் மனைவியை வைத்துக்கொண்டு வெளியில் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றே புரியவில்லை.
பெண்களுக்கு எங்கு போனாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் மன அழுத்தம்தான்.....சுதந்திரம்,சமஉரிமை என்பது எல்லாம் வெறும் பேச்சில் மட்டும்தான் நடைமுறையில் இல்லை......அனுபவத்தில் நானும் சில சம்பவண்க்களைப்பார்த்திருக்கிறேன் இப்படி நடந்து கொள்பவர்கள் வீட்டிலும் அம்மா,அக்கா,தங்கை,மனைவி,மகள் இப்படி ஏதாவது ஒரு உறவு இல்லாமலா இருக்கும்....?இருந்தும் ஏன்தான் இப்படியோ தெரியவில்லை?
பேருந்தில் பயணத்தின் போது நெரிசலில் நின்று கொண்டிருந்தால் கழுத்திற்கு அருகில் வந்து கழுத்தறுக்கும் கழுகுக்கூட்டங்கள் சில...இருக்கையில் இருந்தால் கால்களை சுரண்டிப்பார்க்கும் மிருகங்கள் ஒருப்பக்கம்........
அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களின் கைகளை, கால்களை உரசிப்பார்க்க அதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நரிக்கூட்டம் ஒருப்பக்கம்......
நிறைய சூழலில் பெண்ணென்பவள் நிம்மதியாக இருக்க முடிவதில்லை வெறும் பொம்மையாகவே கருதப்படுகிறாள்....உடலளவிலும் மனதளவிலும் ஒவ்வொரு நொடியும் பல பெண்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.தட்டிக்கேட்டாலும் தவறுகள் நம் பக்கமே திரும்பிவிடுகின்றன......
"மன்னிக்கவும் தெரியாமல் கை/கால் பட்டுடிச்சி"
"இல்ல அவ பொய் சொல்றா"
"நான் வேணும்னே அப்படி பண்ணல"
இப்படி ஏதாவது ஒரு பதிலை சொல்லி சமாளிப்பதே அவர்கள் வேலையாய் போகிறது.....
இந்த மாதிரி நிகழ்வுகளை பார்க்கும் போதும் நினைக்கும் போதும் என்று தீரா தலைவலியே நமக்கு வந்துவிடுகிறது...
ச்சே என்னடா உலகம் இது.....ஒரு சில ஆணுக்காக ஆண் வர்க்கத்தையே குறை சொல்லுமளவுக்கு போகும் சூழலும் வந்துவிடுகிறது.
பெண்களின் முன்னேற்றம் இப்படியே போய்க்கொண்டிருந்தால் நிச்சயம் அவள் தன மானம் காக்க கொடிய மனித மிருகங்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள வெளியில் செல்வதையும் கொஞ்சம் கொஞ்சசமாக நிறுத்தி இறுதியில் முன்போல் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் நிலையும் வரலாம்.......அப்படி வந்தாலும் ஆச்சர்யப்பட தேவையில்லை......ஏனென்றால் இன்றைய நிலை இதுதான்....!
ஆதரவான அப்பா என்ற உறவும், தட்டிக்கேட்டு நம்மை அணைத்துக்கொள்ளும் அண்ணன் என்ற உறவும்,உடனிருந்து தோள் கொடுக்கும் தோழன் என்ற உறவும் இல்லையெனில் எப்பவோ அந்நிலை வந்திருக்கும்........