உன் தந்தை கேட்கும் முன் …
மானம் மரியாதைப் பார்க்கவில்லை
உனைக் காதலிக்கும் பொழுது
ரோஷம் மட்டும் பிறந்தது
உன் தந்தை என்ன வேலைப்பார்க்கிறாய்யென்று
எனைப் பார்த்துக் கேட்டப்பொழுது
பணம் கூட கிடையாது
உனைக் காதலிக்கும் பொழுது
கௌரவம் மட்டும் பிறந்தது
உன் தந்தை என்ன படித்திருக்கிறாய்யென்று
எனைப் பார்த்துக் கேட்டப்பொழுது
மரணம் கூட பயமில்லை
உனைக் காதலிக்கும் பொழுது
வலி மட்டும் பிறந்தது
உன் தந்தை என்ன ஆளுயென்று
எனைப் பார்த்துக் கேட்டப்பொழுது
என் காதல் ஒன்று தான் இருந்தது
உனைக் காதலிக்கும் பொழுது
தைரியம் மட்டுமே பிறந்தது
உன் தந்தை கேட்கும் முன்
என் மனைவியை கண்கலங்காமல்
பார்த்துக்கொள்வேனென்று …!