வானொளிக் காட்சி

வீட்டில் தான் அமைத்தேன்
தோட்டம்!
விருட்சம் ஒன்று
வான் வரை உயர்ந்தது!
வினாக்கள் தொடுத்தது!
பசுமை என்பது
பூமிக்கு மட்டும் சொந்தமா...?
வான் வரை
வளர்ந்தால்
வட்டியாய் என்னை
வெட்டித்தான் கேட்பீரோ...?
வானளாவ மரம்
வளர்ந்தால்
வையம் வளராதா...?
மண் செழிக்க,
மழைத் தெளிக்க,
மரம் வளர்க்க
வானொளிக் காட்சி தந்தேன் என்றது!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (9-Apr-15, 7:19 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 185

சிறந்த கவிதைகள்

மேலே