துளிப்பாக்கள்
மார்கழியும் சித்திரையும் பார்ப்பதில்லை
விழிகளின் குளியல் வெந்நீரில்தான்
கண்ணீர்...!!!
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
விற்றாலும் குறைவதில்லை
அவளது வியாபாரத்தில்
விலைமகள்...!!!
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
சாய்ந்து கிடந்ததை நிமிர்த்தியது
உச்சி வெயில் சூரியன்
நிழல்...!!!
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
அண்டவெளியிலும் கொடுமைகளா??
தற்கொலை செய்துகொள்கிறது
எரி நட்சத்திரம்..!!
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
ஊரில் இழவு விழுந்தால்தான்
உலையே கொதிக்கிறது
வெட்டியான் வீடு...!!!
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=