துளிப்பாக்கள்

மார்கழியும் சித்திரையும் பார்ப்பதில்லை
விழிகளின் குளியல் வெந்நீரில்தான்
கண்ணீர்...!!!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

விற்றாலும் குறைவதில்லை
அவளது வியாபாரத்தில்
விலைமகள்...!!!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

சாய்ந்து கிடந்ததை நிமிர்த்தியது
உச்சி வெயில் சூரியன்
நிழல்...!!!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

அண்டவெளியிலும் கொடுமைகளா??
தற்கொலை செய்துகொள்கிறது
எரி நட்சத்திரம்..!!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

ஊரில் இழவு விழுந்தால்தான்
உலையே கொதிக்கிறது
வெட்டியான் வீடு...!!!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

எழுதியவர் : சொ.சாந்தி (11-Apr-15, 11:01 pm)
பார்வை : 99

மேலே