எப்படி இருப்பேன்.
என் நிழலே என் நிழலே
எனை ஏனோ பிரிந்தாய்
என் உயிரே என் உயிரே
எனை ஏனோ மறந்தாய்
கண்ணுக்குள் தேடினேனே
கண்ணீரை கொடுத்தாயே
கனவுகள் வலிக்கின்றதே!
நெஞ்சுக்குள் பேசினேனே
நிமிடங்கள் தொடர்ந்தாயே
நினைவுகள் தவிக்கின்றதே!
ஒரு நிமிடம் நீ பிரிந்தாலே
உனக்கெனவே நான் இறந்திருப்பேன்
ஒரு வார்த்தை கூட சொல்லாமல்
எனைவிட்டு நீ பிரிந்தாயே
எப்படி நான் உயிர் இருப்பேன்.