குழந்தைகளே
செல்ல குழந்தைகளே எந்தன்
நல்ல குழந்தைகளே
கள்ளம் ஏதுமின்றி
உள்ளம் கொண்டவரே
பள்ளம் நிறைந்ததடா உலகம்
கள்ளம் நிறைந்ததடா
செல்லும் பாதையிலே நம்மை
கொல்லும் உலகமடா
காசை குறிவைக்கும்
பேராசை உலகமடா
நேசம் தொலைத்துவிட்டு பெரும்
வேஷம் போடுமடா
வா நீ என்று சொல்லி உன்
சாதி கூறுமடா
பச்சை மண் உன்னை அது
கொச்சையாக்குமடா
மதங்கள் என்று சொல்லி
மனதை பறிக்குமடா
அதிலே விழுந்துவிட்டால் உன்னை
மடையனாக்குமடா
பலரின் ஆசையைத்தான் சமூகம்
உன் மேல் திணிக்குமடா
அதுவாய் மாறிடவே உன்
நிலையை தாக்குமடா
மேதை என்று சொல்லி
பேதையாக்கிவிடும்
போதை கொண்டு வந்து உன்
பாதை மாற்றிவிடும்
தீயவை விலக்கி
நன்மையை தேர்ந்தெடு
உன் தன்மைகள் செழிக்க
உண்மையை சார்ந்திடு
பகுத்து அறிய கற்றுக்கொள் உன்னை
வகுக்க நினைப்பவர் விட்டுச்செல்
பண்பாடு என்பதை காத்து நில்
பண்போடு வாழ்வதே சிறந்தது கல்