அப்பா

யார் அடிச்சாலும் அம்மானு பேர்,
சொல்லி அழுதிடுவேன்,
ஆனாலும் அப்பாகிட்ட,
சொல்லிடுவேன்னு மிரட்டிடுவேன்..!!

தெய்வத்த கும்பிட சொல்லி,
உன் தோல் மேல சுமந்திடுவ...

என் தெய்வத்து மேல அமர்ந்துகிட்டே,
நா தெய்வத்த எப்படி வணங்கிடுவேன்....!!
.

கால் வயிறு அர வயிறு தின்னுகிட்டு,
எனக்கு பிடிச்ச சாதத்த..
அம்மாவ செய்ய சொல்லி,

சூடான சாதத்த ஊதி ஊதி ஊட்டிடுவ..!!
என் சிரிப்பையும் தான் பார்த்து நீ ரசித்திடுவ..!!
.

நாள் எல்லாம் உழைச்சலும்,
என்னோட சேர்ந்து ஊர் சுத்தி காட்டிடுவ...
.

அப்பா நீ வெளி ஊரு போகையில,
நா தேம்பி தேம்பி அழுதிடுவேன்..
.

ஆனாலும் நீ வாங்கி வரன்னு சொன்ன
பொம்மை Car-அ நெனச்சிகிட்டே,
என்ன மறந்து உறங்கிடுவேன்...!!!
.
ஊசி ஒன்னு பார்த்தனுன்ன..
நா ஓயாம அழுதிடுவேன்..

ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்லனு..
சொல்லிபுட்டே உன் விழி ஓர கண்ணிர..
மெதுவா நீ துடச்சிடுவ....
....................................................................................................................................................................
அப்பா உன்ன பத்தி கவி எழுத முடியாம...
என் பேனா முள்ளும் அழுகுதப்ப...

- R.Govarthanan

எழுதியவர் : R.Govarthanan (14-Apr-15, 10:01 am)
சேர்த்தது : கோவர்த்தனன்
Tanglish : appa
பார்வை : 497

மேலே