சுயம்வரம்

அதிசய ராகம் மீட்ட ...
அதிஸ்ட மகள்
தேரேரிவர...
என் உயிர் மிச்சமாக ...
எனக்குள்ளே வெளிச்சமாக ...
இசைஞானி ராகம் மீட்ட...
இசைப்புயல் தன் குரலில் பாட...
யார் இந்த தேவதை என
ஊரெல்லாம் வியந்து நிற்க்க ...
பாவையவள் எனை நோக்கி ...
என் அருகில் வந்து நிற்க்க .......
மாதவம் நான் செய்தேனோ
இல்லை
நான் ஏதும் பிழை செய்தேனோ
என்று புரியாமல் விழித்திருக்க...
தாண் கொடுத்துவைத்தால்போல்
என் புருவம் தேடிவந்து
இச் என்று முத்தமிட்டு ...
என் கழுத்தில் பூ மாலையிட்டு...
நீ தான்
என் மணாளன்
தன் கழுத்தில் மாலையிடு
என்றுரைக்க .....
யாரோ தூரத்தில்
எனை வசை பாடும் குரல் கேட்டு
நானோ திரும்பி நிற்க்க...

என் மனைவி
கையில் விளக்குமாற்றுடன் .......
வாசல் பெருக்கவேண்டும்
உள்ளே சென்று உறங்கு என்றாள்........!!!!

எழுதியவர் : VeeKay (16-Apr-15, 4:12 pm)
Tanglish : suyamvaram
பார்வை : 59

மேலே