பாடல்

ஒருகிளி ஒருகிளி சிறுகிளி
உன்னைத் தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி
வழிகிறதே விழிவழி

உனக்குள் நான் வாழும்
விவரம் தான் கண்டு
வியக்கிறேன் ..வியக்கிறேன்

எனக்கு நானல்ல
உனக்குத்தான் என்று உணர்கிறேன்

நிழலென தொடர்கிறேன்

ஒருகிளி ஒருகிளி சிறுகிளி ….

விழி அல்ல விரலெது
ஓர் மடல் தான் வரைந்தது
உயிரல்ல உயிலது
உனக்குத்தான் உரியது…

இமைகளில் இடையில் நீ
இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
விழிகளில் வழியில் நீ
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்..

காதல் தான்….
எந்நாளும் ஒரு வாரத்தைக்குள் வராதது

காலங்கள் சென்றாலும்
அந்த வானம் போல் விழாதது

ஒருகிளி ஒருகிளி….

தூரத்து மேகத்தை
துரத்திச் செல்லும் பறவை போலே
தோகையே …
உன்னை எண்ணி நான்
தேடி வருவேன் இங்கே..

பொய்கை போல் கிடந்தவள்
பார்வை என்னும் கல்லெறிந்தாய்
தேங்கினேன் உன்கையில்
வழங்கினேன் இன்றே….

தோழியே உன் தேகமென்னும்
தென்றல் தான் தொடாததோ…

தோழனே உன் கைகள் தொட
நாணம் தான் விடாததோ

ஒருகிளி ஒருகிளி…

எழுதியவர் : (17-Apr-15, 3:16 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : paadal
பார்வை : 30

மேலே