உழவின்றி இவ்வுலகில்லை ---- சுடர்

நெல் நட்ட வயலெல்லாம்-இன்று
கல்கொண்ட கட்டடமாச்சு ......
தைப்பிறந்தும் நாளாச்சு -விதி
வழிபிறக்காமலே போச்சு .......
இட்டப் பயிரெல்லாம்
பொடி சுட்டுப் போயிடுச்சு ......
முக்கால நிலைமாறி
மூணுபோக விளைச்சலெல்லாம்
அக்கால கனவாபோச்சு ...........
வருணனும் வதைக்கிறான்
வட்டிக்காரன் முறைக்கிறான்
உதவிக்கரம் நீட்டிட உலகில்
ஒத்த உசிரும் இல்லாம
நாதியத்து தவிக்கிறோம் ......
வானம் பொழிஞ்சும் நாளாச்சு -எங்க
வயிறு நிரஞ்சும் பலமாசமாச்சு
மனசும் மறுத்துப்போயிடுச்சு ........
மனிதனே !!
உழவின்றி இவ்வுலகில்லை -இதை
உணர்ந்தால் நாளை கவலையில்லை ..........

எழுதியவர் : இரா.சுடர்விழி (18-Apr-15, 10:08 pm)
பார்வை : 351

மேலே