செம்மரம் தின்ற உயிர்கள் எத்தனையோ

செம்மரம் தின்ற
உயிர்கள் எத்தனையோ?
தெரிந்தது இருபது தமிழர்கள், தெரியாதது எத்தனையோ?

செம்மொழிப் பேசும்
நம் மக்கள் சாக
அதிகாரம் என்ன
நம்பூதிரி கையிலோ?
பிழைப்புக்கு சென்றவர்கள் பிணமான கோரம்
கண்டும் காணமலிருக்கும் உங்களுக்கு கண்கள் இல்லையோ?

கோடிகள் கொள்ளையடித்த கொள்ளையர்கள் குளிரறையில் உறங்கிக் கிடக்க,
கோணிப்பை சுமந்தவர்கள் பிணவறையில் உறங்கிப்
போன விதி என்னவோ?

திருமலையிலுள்ள திருமாலின் கையிருப்பு பலகோடி யிருந்தும்
அவன் கண் செம்மரம் மீது பட்டதுவோ?
அதனால் செங்குருதியின் சுவை அவனுக்கும் பிடித்ததுவோ?

'திருப்பதி போன திருப்பம்' இந்த வாக்கியம் பொய்யாகி போனது இவர்கள் வாழ்வில்.

எழுதியவர் : அரிபா (19-Apr-15, 12:16 pm)
சேர்த்தது : ஹரி
பார்வை : 68

மேலே