உன்னுடன்

தனித்திருக்கும்
பொழுதுகளில்
தட்டிக்கொடுக்கின்றன
உன்னுடனிருந்த
ஊமைப்பொழுதின்
நினைவுகள்

பழகிய
நாட்களை விட
பார்த்த நாட்களில்
அதிகம்
தொலைந்தவன்
நான்.

கனவுகளுக்கும்
வண்ணமடிக்கும்
உன்னுருவம்
ஏனோ?
கருப்பு வெள்ளையாய்..

நினைவுகளில்
நீ வந்து
தட்டிச் செல்வதே
வரமெனில்
நினைவுகளுடன்
காத்திருப்பதே
தவம்...

கனவுலகில்
கைப்பிடித்து
காததூரம் நடப்பவளே!
நினைவுலகில்
நேரில் வந்து
நெருங்கி நிற்க மாட்டாயா?

உன்னுடன்
பேசி
நடந்து
ஓடி
பாடி
ஆடி
சிரித்து
அழுதிடும் பொழுதுகளில்
நானுமிங்கு நீயாகிறாய்
ஆக்கி விடுகிறாய்....

என் சுவாசமே!
காற்றில் கரைந்தாலும்
காற்றே கரைந்தாலும்

உயிர்வாழ்வேன்
உன்னுடன்
நானிருக்கும் வரை...

எழுதியவர் : கார்த்திக் (21-Apr-15, 3:16 pm)
Tanglish : unnudan
பார்வை : 83

மேலே