கானல் நீர் வாழ்கை

பத்து மாசம் சுமந்து பக்குவமா தான்
பெத்தெடுத்தா எங்க ஆத்தா!
ஆத்தா சொல் பேச்சை கேட்டு
ஒழுங்கா தான் நான் வளர்ந்தேன் !
குடும்ப நிலமைய எண்ணி
நல்லா தான் நான் படிச்சேன்!
படிச்ச படிப்புக்கு ஏத்த நல்ல
வேலையத்தான் வாங்கி புட்டேன் !
வேலை கிடைச்ச சந்தோசத்துல
விவரம் இல்லாம சுத்தி வந்தேன் !
வெளிநாடு மோகம் என்னும்
மாய வலையில் விழுந்து புட்டேன் !
லட்ச ரூவா சம்பளமுனு
ஆசை வார்த்தை காட்டி வச்சான் !
பணம் கட்ட சொன்னாங்கனு
லட்ச ரூவா கட்டி தொலைச்சேன் !
பணம் கட்ட வேண்டாமுன்னு
பெத்தவங்க
சொன்னதையும் தான் கேக்கலியே !
ரெண்டு மாசத்துல அனுப்பறேன்னு
வாக்குறுதியும் கொடுத்து வச்சான்!
மூணு மாசம் ஆகியும்
ஒரு விவரமும் சொல்லலியே !
ஒரு வாரம் முன்ன பின்னனு
சொல்லி
வருஷத்தையும் ஓட்டி புட்டான்!
பணம் போச்சேன்னு விசனப்பட்டு
ஆத்தா மூலையில முடங்கிபுட்டா!
வேண்டாமுன்னு சொன்னத
நீயும் தான் கேக்கலியே அய்யா !
வீடு கட்டி முடியாம
பாதியிலே நிக்குதய்யா !
என்றெல்லாம் சொல்லி அழுவும்
ஆத்தாவ என்ன சொல்லி
ஆறுதல் படுத்த!
தாலிய அடகு வச்சி கட்ன பணத்த
இன்னும் வாங்க தான் முடியலியே !
சுற்றத்தார் கேலி பண்ணும்
கோமாளியாவும் ஆக்கிபுட்டான் !
ஏழை வயித்துல அடிச்ச இவன
நானும் தான் என்ன செய்ய!
கொலைகாரனுக்கு பொறந்திருந்தா
கொலையும் தான் பண்ணிருப்பேன் !
கூலிகாரனுக்கு பொறந்ததால
கூனிக்குறுகி கேக்கறேனய்யா !
மத்தவங்கள
ஏமாத்தியும் பொழக்கலியே !
ஆனா ,
ஏமாந்து தான் நிக்கறேனய்யா !
வெளிநாட்டு மோகத்தால
எந்தன் வாழ்கையே
கானல் நீராய் போச்சிதய்யா!
உங்கள் தோழன்
தங்கதுரை