அன்னைக்கொரு ஓலை

என்னை பெற்று எடுக்கும் வரை
வயிற்றில் சுமந்தாய்
பெற்ற பின் மனதில் சுமந்தாய்.
அளக்க முடியா அன்பை தந்தாய்
அதனால் தானோ ஏனோ மழை
பெய்யாமலும் நான் மட்டும்
நனைந்து போகிறேன் நீ தரும் பாச மழையால்

எழுதியவர் : கண்ணன் (3-May-15, 9:16 pm)
பார்வை : 197

மேலே