மானிடச் சிதறல்கள்
வெள்ளிக்கிழமை
தேங்காய்களும் பூசணிக்காய்களும்
சாலையில் உடைப்படும் போதெல்லாம்
என்னச் சொல்லி சிதறலாகியிருக்கும் ?
மனிதனை எப்படிக் கண்டித்து
வெடித்து விசும்பியிருக்கும்?
ஆறாம் அறிவெல்லாம்
உனக்கு எதுக்குடா மானிடா என்றா ?
அடடா நாங்களென்ன
பகுத்தறிவின் சாபக்கேடா என்றா ?
(நன்றி : தோழர் அபி மற்றும் தோழர் சுஜய் ரகு )