வைகை
வைகை
இறைவன் கை வைத்ததால்
வந்த நீரு !
அவன் கை விரித்ததால்
காணாமல் போன நீரு !
அழகர் வரும் முன்னே
அளவா வரும் நீரு !
அழகா பார்த்து ரசிச்சு
களவா போன நீரு !
கம்பம் மெட்டு
நீ தொட்டு !தொட்டு !
கால் கொலுசு
இல்லமால்
சல சலன்னு வந்த நீரு !
சுருளி ஆறு ! மஞ்சள் ஆறு !
முல்லையாறு !
எல்லாம் சேர்த்த பேரு !
சுணங்காம பாஞ்ச
வைகை ஆறு!
வெள்ளை மண்ணு
அள்ளி அள்ளி
வெற்றிடமா காஞ்ச பாரு !
பார்க்கின்ற இடம் எல்லாம்
வெறும் காணல் நீரு !
படிக்க மட்டும் இருக்குமோ
உன் வரலாறு !
மேகத்துக்கு உன் சோகம்
இன்னும் தெரியவில்லயா ?
மேற்கு தொடர்ச்சி மலை
பெற்ற பாவ பிள்ளையா?
மாறி மாறி மண் அள்ளும்
மனிதர்களுக்கு இரக்கம் இல்லையா ?
இன்னொரு முறை கை வைக்க
இறைவன் இல்லையா ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
