நான் உன்னுள்ளே, இருக்கிறேன்

நான் உன்னுள்ளே, இருக்கிறேன் .
நீ , என்னுள்ளே இருக்கிறாய் .
பின் எப்படி நான் நானாக இருப்பேன் ?

என் விழிகள் , இரண்டென்றாலும்,
பார்வைகள் நான்கென்பேன்.
என் கண்களுக்குள்ளே, நீயே இருப்பதால் ,
இமைகள் மூட மறுக்கின்றன .

ஒட்டி உறவாட, உடல்கள் இருக்க ,
உள்ளம் உறங்கிட உன் மனதை தந்துவிடு !
அள்ளி அணைப்பது , கைகலென்றாலும் ,
சொல்லிக் கொடுத்தது நீயல்லவா?

உன் மேனி தரும் வாசம்,
அதுவே என் மூச்சின் சுவாசம் .
நலம் அனைத்தும், சுகமென்றாலும்,
நயம் தரும் உன் சொல்லே சொர்க்கமென்பேன்.

எழுதியவர் : arsm1952 (17-May-15, 6:57 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 782

மேலே