சூரியனை தொலைத்த பூமி

எழுத்துக்களை கடந்த துயரம்,
என் காதல் வலி .

நேரம் கிடைத்த போதெல்லாம்
மறக்கவே நினைக்கிறேன்

கிடைக்கும் நேரத்தில்
அவள் நினைவில் கரைந்து போகிறேன் .

பார்ப்பெதெல்லாம் அவளின்
வார்ப்புகளாய் அவதாரம் பெறுகிறது

நினைக்காத நேரங்கள்
நெடுந்ததூர பயணமாகிறது

நினைக்கும் நேரங்கள்
நொடிகளாய் தேய்கிறது

மறக்க விரும்பும் நிமிடங்கள்
யுகங்களாய் கடக்கிறது..

சூரியனை தொலைத்த
பூமி எங்காவது இருக்கிறதா ?

விடியாத இரவுகள்
வலியில்லா சுவர்க்கம்தானே ?

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (18-May-15, 1:00 pm)
சேர்த்தது : krishnamoorthys
பார்வை : 130

மேலே