வசப்பட்டவை
கடலை எழுப்பாமல்
கடலுக்குள் இறங்கும்
கடல் காதலன் மழை
-------------------------------------
மேகச் சல்லடை வழி
நீரூற்றி
நிலமகளுக்கு நீராட்டு விழா
--------------------------------------------
பொங்கும் கடலில்
வேகாத மீன்கள்
---------------------------------------
மரத்தின் விந்தில்
பலநூறு மரங்கள்
------------------------------------------
வெள்ளை உடுப்பில்
அன்னை இல்லா
தெரசாக்கள்
------------------------------------------
மலையின் அழுகை
அருவியாய் விழுகிறது
------------------------------------------
கருப்பாய் இருப்பதால்
கருப்பைக்குள்ளேயே
இருப்பதில்லை காகங்கள்
--------------------------------------------
செத்தவனின் இரத்தம்
வெள்ளையாய் வெளியேறியது
மேகச் சண்டையில்
---------------------------------------------------
ஒவ்வொருவனும் தலைவன்
எறும்பு அணியில்
---------------------------------------------
புணர்ந்த பின் மெத்தையாய்
மழைக்கு பின்
நிலம்
---------------------------------------------------
குடிசைக்குள் செல்வம்
பெயரில் மட்டும்
-----------------------------------------------------