உண்ட வயிறு

வண்ண வண்ண வெந்த காய்களுடனே
வெண்சோறும் நெய்யில் வறுத்துப் புரட்டி
உடன் வரும் உற்ற தோழனாய்
கட்டித் தயிர் கூடிய வெங்காயமும்
எந்தையும் தாயும் அன்றளித்த அமுதாய்
வெந்தயம் மிளகுடன் மணக்கும் குழம்பும்
உரை மிளகாய் உப்புடனே அரிதாரமிட்ட
உருளை எண்ணையில் ஊற வதக்கி
மகிழ்வுடன் எமக்களித்த மென் கரங்களில்
பொன் காப்பிட பணமில்லை- மனமுண்டு
வாழ்த்த வந்தன வார்த்தைகள் .

எழுதியவர் : வாசு சீனிவாசன் (4-Jun-15, 12:26 pm)
சேர்த்தது : Vasu Srinivasan
Tanglish : unt vayaru
பார்வை : 59

மேலே