நீ யாருக்காக

நீர் ஊற்றிய எனக்கு
நீ தேன் தரவில்லை!
என்
மனதில் வேர் ஊன்றி விட்டு
மலரை மட்டும் வேறு கைகள்
பறிக்க அனுமதித்து விட்டாய்!
நிசமாக நான் இருக்கும் பொது
நிழல் கூட தர மறுத்துவிட்டாய் !
மலரே, இப்படி
வண்ணம் மட்டும் எனக்கு காட்டிவிட்டு,
வாசத்தை வாரி வழங்கி விட்டாய் !
நீ யாருக்காக....................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்