வெற்றியின் கண்ணீர்

உணர்வுகளின் வார்த்தை
ஊமை ஆனால்
மொழியாய் உருகும் கண்ணீர்!

அளவுக்கு அதிகமான
அன்பை சுவாசித்துவிட்டேன்
உன்னால்
வாயடைத்து போனேன்
வழியேதும் இன்றி
கண்ணீராய் வழிந்தது
ஆனந்தம்...

தேடி அலைகின்றேன்
உன்னை ....
தேடலின் முடிவில்
நீ கிடைத்தாய்
ஓடி வந்து
அணைத்துக் கொண்டேன்
ஒரு நொடியும் உன்னை விட்டு
விலகமாட்டேன்!

ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
என் சுவாசம்
என் உயிரை காண...
உன்னை பார்த்த மாத்திரத்தில்
உன்னை கட்டியணைத்து
உச்சிதனை முகர்ந்து
உன் தோளோடு தோள் சாய்ந்து
உன் விரல்களைப்பற்றி
உன் மடியில் படுத்துக்கொண்டிருக்கையில்
உனக்கும் எனக்கும் பிடித்த பாடலை கேட்கவேண்டும்!
உன்னோடு நிறைய பேச வேண்டும்!
பேசி பேசி சிரிக்க வேண்டும் இருவரும்...

உன்னை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க !
உன் கரம் பற்றிக் கொண்டிருக்க !
உன் மடியில் என்னை தாங்கிக் கொண்டிருக்க!
நான் நீ சுவாசிக்கும் காற்றாகிடுவேன்...

~என்னுயிர் தோழிகளுக்கு இக்கவிதை சமர்ப்பணம்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (10-Jun-15, 10:05 pm)
Tanglish : Vettriyin kanneer
பார்வை : 160

மேலே