இருப்பதும் இல்லாதததும்

சிட்டுக் குருவிக்கென்னக்..
கட்டுப்பாடு ..
பாடலில் வரும் சிட்டுக்குருவி
யாதெனக் கேட்டான்..பேரன்.
..
சிரித்து வைத்தேன்!
***
திண்ணைப் பள்ளிகள் என்பதை
எங்கோ படித்து விட்டு ..
என்ன அது என்றான் ..பேரன்!
..
முகத்தைத் திருப்பிக் கொண்டேன்!
**
கத்தியின்றி ரத்தமின்றி
காந்தி வாங்கித் தந்தார் சுதந்திரம்..
கத்திப் படித்தான்..பேரன்..!
..
எழுந்து வெளியில் வந்து விட்டேன்!
***
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவார்..
என்ற பாடலை சத்தமாக
கண்மூடி பாடினேன்..
..
பேரன் எழுந்து ..
வெளியில் போய் விட்டான்!

எழுதியவர் : கருணா (11-Jun-15, 4:49 pm)
பார்வை : 144

மேலே