உனக்கு முன் ஒரு நாளில்

என் சுவாச வாசம் தொலைந்து போயிருக்கும்...
அந்த நாளில்.....
ஓயாது உன்னுடன் பேசிய
என் உதடுகள்,
உறங்கிப்போயிருக்கும்.........
அடிக்கடி உன்னுடன் சண்டையிட்ட
என் கரங்கள் அன்று அமைதியாய் இருக்கும்.......
உன்னை பார்க்க துடித்த என் கண்கள்
கண் மூடிக்கிடக்கும்.................
என் தேகம் பனியாய் உறைந்து போயிருக்கும்
பயப்படாதே.............!!!!!!!!
என் குளிர்ந்த நெற்றியில் ஒரே ஒரு
முத்தமிடு..................
அந்த முத்தம் தான் நீ இதுவரை தந்த
முத்தங்களில் தலை சிறந்தது..........
இது தான் நம் கடைசி சந்திப்பு......
இனி நீ என்னைக் காணப்போவதில்லை....
இது வரையில்
என் கனவு
என் கோபம்
என் சண்டை
என் தொல்லை
நீ சுமந்த நான் என்ற பாரம்
எல்லாமே இனிதே நிறைவுற்றது.....
விடை கொடு.............
விடை கொடு.............
உன் கண்ணீரால் அல்ல.......
என் மரணம் கூட உன்னை
கலங்க வைத்திடக் கூடாது.....
உன் கண்ணீர் தான் என் மரணம்........
நீ என்றுமே என்னை பார்க்க
விரும்பாத ஆடையில் நான் புறப்படத்
தயாராகிறேன்.....................
மீளவே முடியாத பயணம் ஒன்றினை நோக்கி....
ஆயிரம் பரிசுகள் நீ எனக்கு தந்திருந்தாலும்...
எதையுமே என்னால் எடுத்துச் செல்ல
முடியவில்லை................
உன் ஒரு பிடி மண்ணைத் தவிர.....
உனக்கு சொந்தமான என்னை நீ
மட்டுமே தொட்டு மண்ணில்
கிடத்து....................
முடிந்தது என் பயணம்......
திரும்பிப் பார்க்காதே............
கண்ணீரை கட்டுப்படுத்து.....
நீ திரும்பிப் பார்க்கும் தூரத்தில்
நான் இல்லை.............
-ருஷானா-

எழுதியவர் : (20-Jun-15, 5:34 am)
Tanglish : unaku mun oru nalil
பார்வை : 82

மேலே