வாழ்க்கை என்பது

             வாழ்க்கை என்பது


மென்மையை உணர்த்தவந்த

இறைவனின் அழகு  சிற்பி  


-.... முள்!


இருளை( வாழ்க்கை வாழ) அழிக்கவந்த

இயற்கை தந்த வரம்


....மரம்


மனப்புயலை  புழுக்கத்தைப் போக்க 
தென்றல் விடும் தூது 

....சன்னல் 

ஒயாமல் ஒலித்தெடுக்கும்
கரகரப்புக்குச் சொந்தக்காரன
ஊருக்குத் தகவல்காரன்

....ஒலிப் பெருக்கி 

கூவுதல் குரைத்தல் சிரித்தல்
முறைத்தல் ஓடுதல் நடத்தல
கூட்டல் பெருக்கல் வகுத்தல்
கோலமிடுதல் பறத்தல் ஆகியன
எல்லாவற்றையும் சேர்க்கும் 
நாடகக் களஞ்சியம்

....தெரு 

உலகம் (மக்கள் ) அத்தனையும்
அள்ளிக்கொள்ளும்
சுகமான சுற்றுலா

...பேருந்து 


எதுவெனாலும் நீ எனக்கு 
வாங்கிப் போடு 
என்ன விட்டுப் போனதும்
என் மனச நிம்மதிய
உன்னால் வாங்க முடியாது

......வீடு

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (20-Jun-15, 5:53 pm)
பார்வை : 111

மேலே