நெருங்கி வா முத்தமிடாதே
நேர்முகம் நோக்கி
நினைவினை இழந்த
அழகான இருவரின்
அகோர முத்தம் அது.
முத்தத்தின் சத்தத்தில் மூச்சிரையாகினர் பலர் .
முச்சி நின்றே போனது சிலருக்கு .
அலைபேசி அலறல்கள்
அவசர ஊர்திகள் .
குருதி குளித்த பாதை
அங்காங்கே மாமிச சிதறல்கள் .
உறவை இழந்தவரும்
உடல் உறுப்புகளை இழந்தவரும்
ஒப்பாரி சத்தங்களால்
துடிதுடித்த கணம்தான் அது.
ஓய்வின்றி உழைத்ததால் ஒருவருக்கு
உறக்கத்தின் உச்சமாம் .
வயிறு முட்ட குடித்ததால்
மற்றவருக்கு
போதையின் கிரக்கமாம்.
காக்கிச்சட்டை போட்டவர்கள்
விரட்டிக்கொண்டு இருந்தார்கள்
விருந்துண்ண வந்த காகங்களையும்
வேடிக்கை பார்க்க வந்த மனிதர்களையும் .
மறுநாள் பத்திரிகை செய்தி மட்டும்
"இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஐம்பதிற்கு மேற்பட்டோர் பலி "
என் பார்வையில் முத்தம்
மோதலாகியது ...!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
