அவளின் அழகு கூந்தலை

காரிகையை வரையும்
தூரிகையென்றால் ஒவ்வொரு
நாழிகையும் தாங்கும் முதுகு
மூர்ச்சையடையுமே!

காரிருள் என்றல்
கருமேகம் கடிந்துகொள்ளும் !

வண்ணமயிலின் தோகையென்றால்
சின்ன குயில் சினந்துகொள்ளுமே!

மல்லிகை அமரும் அறியணையென்றால்
மேனகையே மோகம் கொள்வாள் !

அந்த பவள மலையிடைத் தவழும் அருவியென்றால் !
சர்ச்சைகள் மூள்வதற்கு சந்தற்பமேது !

எழுதியவர் : கவிஞர் தமிழாணவ அலெக்சாண் (24-Jun-15, 11:02 am)
பார்வை : 101

மேலே