சுதந்திரம்?
சுதந்திர நாட்டில்...
சுதந்திரமாய் சிறகொடிக்க படுகிறான்...
எங்கள் தேசிய பறவை...
சுதந்திரமாய் தோலுரிக்க படுகிறான்...
எங்கள் தேசிய மிருகம்...
இருந்தும் மக்கள் (பி)பணம் தின்னும்
அரசியல் கழுகுகளுக்கு எங்கள் நன்றி...
எங்கள் நெற்றிக்காக ஒரு ரூபாயும்,
வாய்க்கு சிறிது அரிசியும் விட்டு வைத்ததற்காக!