எதிர்ப்பார்ப்புடன்

இலைகளை வருடும்
பனிகள் கரைகிறது
இளமையான நீளம்
வானமாய் உறைகின்றது

குருவிகள் இசைப்போட
வண்டுகள் போட்டியிட
ரீங்கார கீச்சுகள்
இவை மொழியறியா பேச்சுகள்

எறும்போடும் மரங்களில்
தடங்கள் ஏதும் இல்லை
விசும்போடு மிதந்து வரும்
பஞ்சு மேகம் வெள்ளை

ஒளி வந்து ஒளிந்துக்
கொண்ட கண்களில்
தூக்கச் சிறகுகள்
சிறகடித்துப் பறந்தன

இன்று என்று வந்து
விட்ட தினத்தில்
நாளை என்ற அதே
எதிர்ப்பார்ப்புடன்...

எழுதியவர் : குறிஞ்சிவேலன் தமிழகரன் (2-Jul-15, 6:56 am)
பார்வை : 793

மேலே