உன்னால் நான்

வேதங்களை ஆராய்ந்தேன் -அதன்
மூலதனம் நீயாக தெரிந்தாய்
கீதங்களைஆராய்ந்தேன் -அதன்
சுரங்கள் நீயாக தெரிந்தாய் !
மாதங்களை ஆராய்ந்தேன் -அதன்
நாட்கள் நீயாக தெரிந்தாய் !
உன் பாதங்களை ஆராய்ந்த
போதுதான் தெரிந்தது,
நீயே என் விழி திறந்த தேவதை என்பதை ....!