சட்டென்றுஒரு மரணம்

எதுவோ வேகமாக
வந்து தன்னை
தாக்கி
அடைத்து மூடிக்
கொண்டதை
நினைவுக்குள் கொண்டு
வந்து யோசிப்பதற்குள்
ஏதோ திரவமும்
இன்னும் ஏதோ
அழுந்த தேய்க்க
செய்வதறியாமல் மூச்சடைத்து
தடுமாறி போராடி
செத்தே போனது
கண்ணுக்குள் விழுந்த
சிறு பூச்சி...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (4-Jul-15, 2:05 pm)
பார்வை : 923

மேலே