உயர உயர பறக்கிறாய்

என் கால்களுக்கு
சக்கரங்கள் கட்டித் தந்து..
வளைந்து வளைந்து
உன்னைப் பின்தொடரச் செய்து விட்டு..
எனக்குத் தெரியாமலே
இரண்டு சிறகுகள் எப்போது வாங்கினாய்..
உல்லாசமாய் உயரப் பறக்கும் உனக்கு..
என்னைத் தெரிகிறதா..
நீ இருக்கும் உயரத்திலிருந்து
பார்க்கையில்..?

எழுதியவர் : கருணா (4-Jul-15, 4:34 pm)
பார்வை : 625

மேலே