வருணனையை வருணிக்கும் வலியவன்
வருணனையை வருணிக்கும் வலியவன் நானில்லையடி - ஆனால்
உன்னை வருணிக்காமல் போனால்
மிக வறியவன் ஆவேனடி...
கை பிடியில் நிற்கும் இடையும் - உன்
கருவண்டு பறக்கும் விழியும்
என்னை பித்தனாக்குதே...
சுருக்கென பேசும் சொல்லும் - உன்
இரவு நிலவாய் ஜொலிக்கும் பல்லும்
என்னை கிறுக்கனாக்குதே...
பனித்துளியாய் சிதறும் சிரிப்பும் - உன்
பாசம் குறையாத கடுப்பும்
என்னை அடிமையாக்குதே...
இதுவே போதுமடி -
என் சிந்தையில் கல்லும் ஏறுதடி
என் காதலி